தெய்வமெல்லாம் விண்ணாடிப் போகும் போகும்..
தீமையெலாம் மண்ணகத்தில் தெருக்கூத்தாடும்..
தெய்வங்கள் மறையும்,
தீமைகள் பரவும்..
உய்யுமுண்மை உளத்துண்மை ஓடிப்போகும்..
உலக உண்மை விஞ்ஞானம் கூடிவேகும்.
+ வேதம் விபரீத நிலை அடையும்.
+சாத்திரம் சக்தி இழந்து விடும்.
+தர்மம் தலை குனிந்து நிற்கும்.
+ அதர்மம் ஆதிக்கம் செய்யும்.
+ சத்தியம் சாகும் நிலை அடையும்.
+அசத்தியம் ஆட்சி பீடத்தில் அமரும்.
+ நீதி நிதிக்குள் ஒடுங்கி நிலை குலையும்.
+ உண்மை ஓடி ஒளிந்து கொள்ளும்.
+ பொய்யை மெய் மெய் என்று புகழப்படும்.
+ ஆசாரம் அற்ற அர்ச்சகர்கள் அதிகரித்து விடுவார்கள்.
+ ஆலயங்களில் அறநெறி தவறி அசம்பாவிதங்கள் பெருகிவிடும்.
+சீர் திருத்தம் என்ற பெயரில் சீர்கேடுகள் அதிகரிக்கும்.
+பாமரர்கள் தேர்ந்தெடுத்த பாதகர்கள் அரசாள்வார்கள்.
+ ஜாதிமதக் கலப்படம் அதிகரிக்கும்.
+கொலை, களவு, கற்பழித்தல் அதிகரிக்கும்.
+ ஆசிரியர்கள் வழி நிற்காத மாணவர்கள் அதிகரிப்பார்கள்.
+ இது அகால மரணம் உண்டாக்கும் என்று அறிந்தும் வாகனம் ஓட்டி மரிப்பார்கள்.
+அறச்செயல் அரசியல் ஆகி அனாசாரம் பெருகும்.
+இயற்கை சீற்றத்தால் சீரழிவு உண்டாகும்.
" இறைவன் இருந்தும் இல்லாதவன் போல் இருப்பான் !"