அன்பானவர்களுக்கு வணக்கங்கள் !
வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற
வாழ்வதற்கே !
அன்பு நண்பர்களே !
தயவுசெய்து அறிவு கெட்டவர்களைக் குறிக்க இனிமேல் " முட்டாள் "மற்றும்
" மடையன் " என்ற சொற்களைப் பயன்படுத்தாதீர்கள்.
தேரோட்டங்களின் போது அதன் வேகத்தைத் தடுக்க பெரிய உருட்டுக் கட்டையைப் பயன்படுத்தி முட்டுக் கொடுப்பதைப் பார்த்திருப்பீர்கள். அதை எல்லோராலும் செய்ய முடியாதாம். அதற்கென்று சில வலிமையான.. கைதேர்ந்த ஆட்கள் இருப்பார்களாம். அவர்களைத் தான் "முட்டுக் கொடுக்கும் ஆள்" என்ற பொருளில் " முட்டு ஆள்.. முட்டு ஆள் " என்று அழைக்கப்பட்டுக் காலப்போக்கில் அது மறுவி
" முட்டாள் " என்று ஆகிவிட்டதாம்.
அதேபோல் பெருவெள்ளம் ஏற்படும் காலங்களில் ஏரிகள்.. கண்மாய்கள்.. பெரிய குளங்கள் நிரம்பி வழியும் நிலையில் அவற்றிற்குக் கீழே அடியாளத்தில் இருக்கும் மடைகளைத் திறந்து நீரை மடைமாற்றிவிட என்று சில பயிற்சி பெற்ற... திறன் வாய்ந்த ஆட்கள் இருப்பார்களாம்.. அந்த நீர்நிலைகளில் குதித்து.. உள்ளே அடியாழம் வரை நீந்திச் சென்று மிகச்சரியாக அந்த அடைத்து வைத்திருக்கும் மடைகளைத் திறந்து விடுவார்களாம் அந்த மாபெரும் மனிதர்கள்.
இதில் அவர்கள் தங்கள் வேலையைக் கனக்கச்சிதமாகச் செய்தாலும் அந்த நீரின் அழுத்தம் மற்றும் அதிவேகத்துடன் போட்டி போட முடியாமல் வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டு நிறையப் பேர் தங்கள் இன்னுயிரை இழந்து விடுவார்களாம்.
அந்த மனிதர்களைத் தான் "மடையர்கள் " என்று அழைப்பார்களாம்.
அப்படி அவர்கள் வெள்ளப் பெருக்கில் குதிக்கும் முன் தங்கள் அம்மா அப்பாவிடம் ஆசி பெற்று விட்டு.. திருமணம் ஆகி இருந்தால் மனைவிக்குத் தைரியம் சொல்லி விட்டுத் தான் வெள்ளத்தில் குதிப்பார்களாம்.
புகழ்பெற்ற திருமதி ஜெயந்தஶ்ரீ பாலகிருஷ்ணன் அவர்கள் ஒரு சொற்பொழிவில் கூறியுள்ளார்கள். " அதனால் முட்டாள்.. மடையன் என்று அறிவில்லாத மனிதர்களைக் குறிக்க இந்தப் பதங்களைப் பயன்படுத்தாதீர்கள் தயவுசெய்து.." என்ற அவரின் பேச்சைக் கேட்டபின் அவற்றைப் பயன்படுத்துவதை நிறுத்தி விட்டேன். தயவுசெய்து தாங்களும் நிறுத்தி விட்டு.. தங்களது நண்பர்களிடமும் இதைப் பகிரும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றிகளும்.. நல்வாழ்த்துக்களும் அருமை நண்பர்களே!
No comments:
Post a Comment