“ கல்லிலே கலைவண்ணம் கண்டான்
கண்பார்வை மறைந்தாலும் காணும் வழி தந்தான் ! “ என்று பழைய தமிழ்த் திரைப்படப் பாடல் ஒன்று.
அப்படிப்பட்ட ஒரு புகழ்பெற்ற கோவிலைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம் வாங்க பிள்ளைகளா !
இந்தக் கோயிலுக்கு வரும் குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் என மூன்று பருவத்தினருக்கும் மகிழ்ச்சி சேர்க்கும் வகையில் தனித்தனியாகச் சிற்பங்கள் அமைந்திருக்கின்றன.
சிறுவர்களுக்காக விலங்குகள், பறவைகள் போன்றவற்றின் சிற்பங்கள் மிகக் குறைந்த உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
இளைஞர்களுக்காக ஊடல், கூடல், ஆடல் போன்ற சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன.
வயதானவர்கள் கண்டுகளிக்க ஆன்மிக சிற்பங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
கோவிலின் அடிவாரம் முதல் கோபுர உச்சி வரை உள்ள சுவர்கள் அழகிய சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
கோவிலின் மேலேயுள்ள மாடங்களிலும் வீணை, மார்டலா போன்ற பல்வேறு இசைக்கருவிகளை வைத்திருக்கும் ஆண் மற்றும் பெண் இசைக் கலைஞர்களின் கற்சிலைகள் உள்ளன.
இதுபோன்ற மக்களின் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகள் அனைத்தையும் கல்லிலேயே உயிரோட்டத்துடன் காட்சிகளாக்கி ஏராளமான சிற்பங்களாகச் செதுக்கி இருக்கிறார்கள் .
அதனால் தான் “ இங்கே, கல்லின்மொழி மனிதனின் மொழியை தாண்டிச் செல்கிறது" என்று வியந்து கூறியிருக்கிறார், மகாகவி ரவீந்திரநாத் தாகூர்.
இப்படி அவரை வியக்க வைத்தவை, உலகப் புகழ் பெற்ற கொனார்க் சூரியபகவான் கோவில் சிற்பங்கள் தான் .
மனிதன் முதலில் இயற்கை சக்திகளையே வழிபட்டான் என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. அப்படி மனிதர்கள் வழிபட்ட முக்கியமான வழிபாடுதான் ‘சூரிய வழிபாடு ‘!
இது இந்துக்களின் முக்கிய வழிபாடுகளில் ஒன்றாகவே மாறிவிட்டது .
விவசாயத்துக்கு அடிப்படையானவற்றில் சூரியனுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. அந்த சூரிய பகவானுக்கு ஒவ்வொரு அறுவடையின் போதும் படையல் போட்டு வணங்கி விட்டுத்தான் விவசாயப் பெருமக்கள் சொந்தப் பயன்பாட்டுக்கோ அல்லது விற்பனைக்கோ தானியங்களை எடுத்துச் செல்வர்.
அதுதான் விவசாயிகள் தாண்டி அனைவரும் கொண்டாடும் பொங்கல், ஓணம், லோ ஹரி, மேகி பிஹு, நுவாகை ஜூஹார் பண்டிகைகள் என்று நமது நாடு முழுவதும் ஆனது.
நவக்கிரகங்களில் ஒன்றாக விளங்கும் சூரியனுக்கு, தமிழகத்திலும், இந்தியாவின் சில பகுதிகளிலும் தனிக்கோவில்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன.
அவற்றில் ஒடிசா மாநிலத்தில் உள்ள கோனார்க் என்ற இடத்தில் அமைந்தது தான் உலகப் புகழ் பெற்ற இந்தச் சூரியனார் கோவில்.
பரி கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள இக்கோவில் சூரியனுடைய தேர் வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
சிவப்பு மண்பாறை, கறுப்புக் கிரானைட், khondalite (கோண்டலைட்) பாறைகள் போன்ற மூன்று வகை கற்களினால் கட்டப்பட்டுள்ளது.
Ashlar masonry is a type of stone construction where all stones are dressed or cut to a uniform shape, size, and surface appearance. They are then laid in horizontal courses, or layers, with very little of a supporting substance called mortar between them.
'ஆஷ்லார்' (Ashlar Technique) தொழில்நுட்பம் இந்தக் கட்டடம் கட்டும் போது பயன்படுத்தப்பட்டுள்ளது என்கிறார்கள்.
Ashlar Technique என்பது a type of stone construction - இவ்வகைக் கட்டட அமைப்பில் பயன்படுத்தப்படும் கற்களின் உருவ அமைப்பு அதாவது shape மற்றும் மேற்புறத் தோற்றங்களும் (surface appearance) ஒரே மாதிரியாக இருக்கும்படியாக ஒரே அளவாகக் கற்கள் வெட்டப்பட்டுப்.. படுக்கை வசத்தில் அதாவது horizontalஆக அடுக்கப்படுகின்றன.
கற்களுக்கு இடையில் மிகமிகக் குறைந்த அளவே சுண்ணாம்பு சிமெண்ட் மணல் தண்ணீர் கொண்டு தயாரிக்கப்படும் கலவை பயன்படுத்தப் படுகின்றது .
கலிங்க கட்டிடக்கலை அமைப்புப்படி, 7 குதிரைகள் பூட்டி, 24 சக்கரங்களுடன் கொண்ட தேரில் சூரியன் எழுந்தருள்வது போல தேர் வடிவில் இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது.
7 குதிரைகள் 7 நாட்களையும், 24 சக்கரங்கள் 24 மணி நேரத்தையும் குறிக்கும்.
சூரியன் என்றாலே சமஸ்கிருத முறைப்படி காயத்ரி.. ப்ரிஹதி.. உஷ்னிஷ்.. ஜகதி.. ட்ரிஷ்துபா.. அனுஷ்துபா.. பங்க்டி (Gayatri, Brihati, Ushnish, Jagati, Trishtubha, Anushtubha, Pankti) எனும் ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட 24 சக்கரங்களைக் கொண்ட தேரில் சூரியன் எழுந்தருளியிருப்பது தான் நமக்கு நினைவுக்கு வரும். அந்த அமைப்பில் தான் இந்தக் கோவில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
நாழிகை, நேரத்தைத் துல்லியமாகக் கணக்கிடும் கால ஓட்டத்திற்கு ஏற்பவும், சூரியனின் நகர்வுக்கு ஏற்பவும், சூரிய ஒளியானது மூலவரின் சிலை மீது படும் வகையிலும் கோயிலைக் கட்டியிருக்கிறார்கள்.
இந்தத் தேருக்கு 12 ஜோடிகள் (24) சக்கர அமைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. 12 ஜோடி சக்கரம் என்பது 12 மாதங்களைக் குறிப்பதாக அமைகிறது.
ஒவ்வொரு சக்கரத்தை ஒட்டியுள்ள சிலைகள் வெவ்வேறு பருவகால நிலையைக் குறிப்பதாக அமைகிறது.
சூரிய பகவான் சிலை அருகில் உஷா மற்றும் பிரத்யுஷா என்ற இரண்டு பெண் தெய்வங்களின் சிலைகள் உள்ளன.
சூரியன் கிழக்கில் உதித்து மேற்கில் மறையும் என்ற விதிப்படி கொனார்க் கோயில் கிழக்கு - மேற்கு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.
11-ம் நூற்றாண்டு முதல் 15-ம் நூற்றாண்டு வரை இன்றைய ஒடிசா, வங்காளம், சத்தீஸ்கர், வட ஆந்திரா மாநிலங்களை உள்ளடக்கிட மகாநதி - கோதாவரி நதிகளுக்கு இடையேயுள்ள நிலப்பகுதிகளைக் கீழைக் கங்கர் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் ஆட்சி புரிந்துவந்தனர்.
இதிலுள்ள திரிகலிங்கர்கள் பிரிவைச் சேர்ந்த கங்கப் பேரரசன் முதலாம் நரசிம்ம தேவரால் (1236–1264) இந்தக் கோவில் கட்டப்பட்டதாக அறிகிறோம் .
இவர், பீகார் மற்றும் வங்காளத்தை சுல்தானியர்களிடமிருந்து கைப்பற்றியதன் நினைவாக, ஒரு நினைவு கட்டடம் எழுப்ப நினைத்தார்.
இந்து சமய மரபுகளில் ஒன்றான சௌரவ மதத்தில் சூரிய பகவான்தான் முக்கியக் கடவுள்.
அதன் பேரிலேயே சூரிய பகவான் மேல் கொண்ட பக்தியினால், சூரிய கோயில் எழுப்ப முடிவு செய்தார் அவர்.
12 ஏக்கர் நிலப்பரப்பில், சுமார் 1200 பணியாட்களோடு நடைபெற்ற கட்டுமானப் பணியானது சுமார் 12 ஆண்டுகள் நடைபெற்றது என்கிறது வரலாறு.
இதைக்கட்டுவதற்கு பேரரசின் 12 ஆண்டு வருமானம் செலவிடப்பட்டதாகவும் ஒரு தகவல்.
இந்தக் கோவிலுக்குள், எங்கும் தூண்கள் காணப்படவில்லை. ஒவ்வொரு கற்களுக்கும் நடுவில் இரும்புத் துண்டுகளைக் கொடுத்து இணைத்து கட்டியுள்ளனர்.
இந்தக் கோவிலின் அமைப்பு மூன்று பிரிவுகளாக இருந்துள்ளது. அதன்படி ஒவ்வொரு 4 மாதத்திலும் ஒவ்வொரு பிரிவின் வழியாக சூரிய ஒளி, மூலவர் சூரியநாதர் சிலை மீது படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
நாழிகை, நேரத்தை எவ்வளவு துல்லியமாகக் கணக்கிட்டிருக்கிறார்கள் பாருங்கள் நம் முன்னோர் ! எவ்வளவு வானவியல் குறித்த தெளிவான அறிவு அவர்களுக்கு இருந்திருக்க வேண்டும் ?
இங்குள்ள தேரின் சக்கரங்கள் ஒவ்வொன்றும் சிறப்பு வாய்ந்தவை.
இந்தத் தேரின் சக்கரத்தை நாம் தினமும் கையாளுகின்றோம் என்பது உங்களுக்குத் தெரியுமா?
அதாவது, மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய 10 ரூபாய் நோட்டின் பின்னால் இருப்பது கொனார்க் சூரிய கோயிலின் தேர்ச்சக்கரமே.
1508-ல் சுல்தான் சுலைமான் போர் தொடுத்து வந்தபோது முக்கிய கருவறையும் இதர இந்து கோயில்களும் சேதப்படுத்தப்பட்டன என்று சொல்லப்படுகிறது.
15-வது மற்றும் 17-ம் நூற்றாண்டுகளுக்கு இடையில் பல முறை பல்வேறு படைகளால் இக்கோயில் சூறையாடப்பட்டதாக வரலாற்று நூல்கள் கூறுகின்றன.
இதையடுத்து, புயல், அரிப்பு காரணமாகவும், கலசத்தின் எடை அதிகமான காரணமாகவும் கட்டடம் சரிந்துள்ளது.
புதர் மண்டிய நிலையிலிருந்த கோயில் 1,800-களில் ஆங்கிலேயர் ஆட்சியின்போது மீட்டெடுக்கப்பட்டு, பாதுகாக்கத் தொடங்கினர்.
தற்போது, இந்திய அரசால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
கோயிலின் கோபுரம் 1676-ம்ஆண்டிலிருந்து கருப்பு நிறமாக உள்ளது. இதனால் இது 'கருப்பு பகோடா' என்றும் அழைக்கப்படுகிறது .
நரசிம்ம தேவரால் கட்டப்பட்ட முழுக்கோவிலும் இப்போது இல்லை. கோவிலின் சில பகுதிகள் இடிந்து விட்டாலும் மிடுக்குக் குறையவில்லை.
சூரியக்கோவிலில் உடைந்து விழுந்த சிற்பங்கள் உள்ளிட்ட முக்கிய பொருட்களை கொனார்க் அருங்காட்சியத்தில் இன்றும் காணலாம்.
இந்தியாவில் சூரிய பகவானுக்காக அமைக்கப்பட்டு எஞ்சி நிற்கும் கோவில் கொனார்க் சூரியக்கோவில் மட்டுமே.
கடந்த காலங்களில் படையெடுப்புகளாலும்.. பராமரிப்பின்றியும்.. கடல் அலைகளின் சீற்றத்தாலும் பெருமளவு சிதிலமடைந்து விட்ட நிலையில்…
பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இக்கோவிலின் பெருமையை உணர்ந்து இந்தக் கோவிலை
யுனெஸ்கோ அமைப்பு 'உலகப் பண்பாட்டுச் சின்னமாக' 1984ம் ஆண்டில் அறிவித்தது.
கோவிலைச் சீரமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.
கொனார்க்கில் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதம் நடைபெறும் 'மஹாசப்தமி விழா' மிகவும் புகழ் பெற்றது.
அப்போது சூரிய பகவானை தரிசிக்க லட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடுவர்.
டிசம்பர் மாதத்தில் சூரியக்கோயில் முன் நடனத் திருவிழா ஒன்றும் நடத்தப்படுகிறது.
உலகெங்கும் மதம், கடவுள் போன்றவை மனிதர்களின் பயத்தை தூண்டவும், அவர்களை அடிமைப்படுத்தவுமே பயன்பட்டு வந்த காலத்தில் ஆன்மீகத்தையும், அறிவியலையும் ஒன்றுபடுத்தி உடலுக்கு ஆரோக்கியத்தையும், மனதுக்கு தெளிவையும் தரும் வகையில் அமைக்கப்பட்டவை தான் ஹிந்து கோயில்கள் ஆகும். ஹிந்து கோயில்களில் புதைந்திருக்கும் அறிவியல் உண்மைகள் பலவும் இன்றைய நவீன கால அறிவியல் அறிஞர்களுக்குப் புரியாத புதிராகவே இருக்கின்றன .
பாரதம் புண்ணிய பூமி ! அது எந்தக் காலம் முதற்கொண்டோ அறிவியல் உட்பட அனைத்துத் துறைகளிலும் ஆகச் சிறந்து விளங்கியது என்பது உண்மையான வரலாற்றை ஊன்றிப் படிப்பவர்களுக்கு நன்கு தெரியவரும் !
ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி ! அருள் பொங்கும் முகத்தைக் காட்டி இருள் நீக்கம் தருவாய் போற்றி !
தூயவர் இதயம் போலத் துலங்கிடும் ஒளியே போற்றி !
தூரத்தே நெருப்பை வைத்துச் சாரத்தைத் தருவாய் போற்றி !
ஞாயிறே நலமே வாழ்க ! நாயகன் வடிவே போற்றி !
நானிலம் உளநாள் மட்டும் போற்றுவோம் போற்றி போற்றி !
ஓம் பாஸ்கராய வித்மஹி திவாகராய தீமஹி : தன்னோ சூர்யப் பிரசோதயாத் :
பாரத நாடு பழம் பெரும் நாடு : நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர் பிள்ளைகளா !
இது போன்ற நல்ல விஷயங்கள் உங்கள் நண்பர்களும் தெரிந்து கொள்ள நிறைய ஷேர் செய்யுங்கள் !
வாழிய பாரத மணித்திரு நாடு ! ஜெய்ஹிந்த் !
பின் குறிப்பு :
தகவல்கள் - பார்த்தவை: படித்தவை : கேட்டவை.
படங்கள் உதவி : from free download in google.
Thank You Google !