Monday, 20 October 2025

வாழ்க்கை கற்றுக் கொடுத்தவை ! (தொகுப்பு - 2)

1)அனுபவம் மெதுவாகத்தான் கற்பிக்கும் : நமது தப்புகளும் தவறுகளும் அதற்குரிய கட்டணங்கள் !

2)எங்கு அன்பு முடிகிறதோ அங்கு கொடுமை பிறக்கிறது !

3)கடுகளவு சிறந்த சிந்தனை பூசணி அளவு நல்ல பலனைத் தரும் !

4)கற்றல் என்பது தானாக நிகழ வேண்டும் : கட்டாயப்படுத்திக் கற்பிக்கப்படுவது மனதில் பதியவே பதியாது !

5)விவேகம் என்பது, சாதாரண அறிவால் செய்ய முடியாததைச் செய்வதுதான் !

6)சிக்கனமும்.. சேமிப்பும் நமது வாழ்க்கைத் தரத்தை நிச்சயம் உயர்த்தும் அன்பு நண்பா ! 

7)பாதுகாப்பின் அடித்தளம் அச்சம்! 

8)சரியாகச் சிந்திக்கத் தெரிந்து கொண்டால் உலகில் எதையும் சாதிக்கலாம் : ஏன் ? உலகையே நம் வசமாக்கலாம் !

9)அடக்கம் நல்லொழுக்கத்தின் இன்னொரு உருவம் ! அதனாலேயே மனிதனுக்கு அது ஒரு நல்ல அணிகலன் !

10)அழகுக்கும் அறனுக்கும் அரணாய் அமைவது அடக்கம் மட்டுமே !


No comments:

Post a Comment