Monday, 13 July 2020

நாள்பட்ட சளி.. வரட்டு இருமல்..இவற்றால் ஏற்படும் காய்ச்சல் குணமாக..

நாள்பட்ட சளி..வறட்டு இருமல்.. அவற்றைத் தொடரும் காய்ச்சல் குணமாக...

   காலங்காலமாக எங்கள் வீடுகளில் அளிக்கப்படும் சளி..இருமல் அவற்றினால் ஏற்படும் காய்ச்சலுக்கு அளிக்கப்பட்டுவரும் எளிமையான கைமருந்து !         நாள்பட்ட சளி..வறட்டு இருமல்.. திரும்பத்திரும்ப இந்தக் கட்டுச் சளியினால் ஏற்படும் காய்ச்சல் கூட இந்த மருந்தினால் குணமாகிவிடும்.

1.சுக்கு

2.அக்கரா

3.சித்தரத்தை

4.நறுக்குமூலம் 

5.கருடக்கொடி

6.அதிமதுரம்

7.கிராம்பு

8.வால்மிளகு 

   இவை அனைத்தும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.

    சுக்கு, சித்தரத்தை, அதிமதுரம் - இவை எல்லாம் தடித்த வேர்கள். அவை பிளக்குமாறு தட்டிக் கொள்ள வேண்டும்.

     அடுப்பில் ஒரு கனமான வாணலியை வைத்து, நன்கு சூடேற்றி, அடுப்பை சிம்மில் (Keep the gas stove in the sim position) வைத்துக் கொண்டு ஒவ்வொன்றையும் தனித்தனியாகப் போட்டு வறுத்துக் கொள்ளவும். (கை பொறுக்கும் சூடு போதும்) .

ஆறிய பின் மிக்ஸியில் போட்டு அரைத்துச் சலித்து வைத்துக் கொள்ளவும்.       

   இதோடு ஒவ்வொரு கைப்பிடி துளசி, தூதுவளை, வெற்றிலை, ஆடாதோடை இலைகள் நொச்சி இலைகளை நன்கு சுத்தம் செய்து,  நிழலில் உலர்த்திப் பொடித்து  மேலே குறிப்பிட்டிருக்கும் மருந்துப் பொடியுடன் சேர்த்து நன்கு கலந்து கண்ணாடி பாட்டிலில் வைத்துக் கொள்ளவும்.  காலை, மாலை - இருவேளை ஒரு ஸ்பூன் தேனில் கலந்து சாப்பிடவும். 

      ஒரு கால் மணி நேரம் வேறெந்தப் பானமோ, உணவோ எடுத்துக் கொள்ளக் கூடாது.

       மற்றபடி பத்தியம் ஏதும் கிடையாது. எப்பேர்ப்பட்ட சளியையும் அறுத்து வெளிக் கொணர்ந்து விடும்.

     குழந்தைகளுக்கு வயதுக்கேற்றாற்போல் அளவைக் குறைத்து, தேனில் கலந்து கொடுக்கலாம். 

      பக்க விளைவுகள்.. பின் விளைவுகள் அறவே கிடையாது.

நன்றிகளும்.. நல்வாழ்த்துக்களும் நண்பர்களே !

No comments:

Post a Comment