நெஞ்சுச் சளி கரைய
அருமை அன்புப் பிள்ளைகளா !
நான் எங்கள் வீட்டில் காலங்காலமாக நாட்பட்ட சளி இருமலைக் குணமாக்க ஒரு எளிய மருந்து சொல்கிறேன்.. கேளுங்க நண்பர்களே !
1)வெற்றிலை - 1 - 2
2) பூண்டு - 2பற்கள்
3 ) சுக்கு - ஒரு சிறிய துண்டு
4 ) மிளகு - 3 - 4
5 ) சீரகம் - அரை டீஸ்பூன்
6 ) ஓமம் - அரை டீஸ்பூன்
7 ) வேப்பிலைத் துளிர் - சிறிது
எல்லாவற்றையும் நன்கு மசிய விழுதாக அரைத்து ஒரு சுண்டைக்காய் அளவு தொடர்ந்து 3 நாட்கள் சாப்பிட நெஞ்சுச் சளி இளகி மலத்துடன் வெளியேறிவிடும்.
சிலருக்கு வாந்தி எடுத்து சளி வெளியேறி விடும்.
பக்க மற்றும் பின் விளைவுகள் கண்டிப்பாக ஏற்படாது. இது அனுபவ உண்மை.
குழந்தைகளுக்குத் தேன் கலந்து கொடுக்கலாம்.
ஒரு வயது அல்லது இரண்டு வயதுக் குழந்தைகள் என்றால் சங்கில் (பாலாடை என்றும் சொல்வார்கள்) போட்டிவிடலாம்.
பயப்பட வேண்டாம்.. நண்பர்களே !
நல்வாழ்த்துக்கள் !
No comments:
Post a Comment