எப்போதோ படித்ததை இப்போது பகிர்கிறேன் நண்பர்களே !
ஒரு வழிப்போக்கர் ஒரு கிராமத்துக் கிணற்றருகில் நின்று கொண்டிருக்கும் ஒரு பெண்ணிடம்
“ அம்மா ! ரொம்பத் தாகமா இருக்கும்மா.. கொஞ்சம் தண்ணி எறச்சு ஊத்துறீங்களா ?குடிச்சுக்குறேன் ! “ என்று உள்ளங்கைகளைச் சேர்த்துக் கொண்டு கேட்கிறார்.
“ இதோ.. குடிங்க ஐயா ! “ என்று தண்ணீர் இறைத்து ஊற்றிய அந்தப் பெண் சொன்ன சில விஷயங்கள் அவரைப் பக்குவப்படுத்தின !
அவை என்னென்ன என்றால் -
இந்த உலகில் :
நிரந்தரமான 2 பயணிகள் - நாள்தோறும் தோன்றி மறையும் சூரியனும் , சந்திரனும் மட்டுமே !
2 விருந்தாளிகள் -
இளமை மற்றும் செல்வம் மட்டுமே! ஏனெனில் இரண்டுமே தற்காலிகமானவை !
சகிப்புத்தன்மை உடைய 2 பேர் - பூமித்தாய் மற்றும் மரங்கள்.
பிடிவாதம் நிறைந்த 2 -
ஒன்று நமது நகங்கள்.. இன்னொன்று நமது முடி.
இவை இரண்டும் நாம் எத்தனை முறை வெட்டினாலும் வெட்ட வெட்ட வளர்ந்து கொண்டே இருக்கும் !
இந்த உலகில் 2 பேர் தான் முட்டாள்கள் -
ஒருவர் எந்தவிதமான தகுதியும் , ஞானமும் இல்லாமல் ஆளும் அரசன்..
மற்றொருவர் அத்தகைய பயனற்ற வீணாப்போன அரசனை ஆதாய நோக்கில்.. கபட எண்ணத்துடன் மிகைப்படியாகப் புகழும் ஒருவன் ; அண்டிப் பிழைப்பவன் !
அந்த வழிப்போக்கர் - மகாகவி காளிதாசன்.
அருள் செய்தவள் -
கல்விக் கடவுள் அருள்மிகு சரஸ்வதி தேவி !
No comments:
Post a Comment