Monday, 11 May 2020

வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே !

வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே !
அன்பானவர்களுக்கு வணக்கங்கள் . 
கண்ணுக்குத் தெரியாத ஒரு கிருமி இன்று உலகத்தின் 90 % நாடுகளின் கண்களில் விரலைவிட்டு ஆட்டிக்கொண்டு இருக்கிறது. இந்த நிலை ஏனென்று ஒரு நொடி நின்று யோசித்துப் பாருங்களேன்...

" கோழிக்கும்.. அணிலுக்கும்.. குருவிக்கும் இங்கே கொரோனா பயமில்லையே !
கோடியில் காசு சேர்க்கும் மனிதரைக் கொரோனா விடவில்லையே !
ஏனென்று ஒரு நொடி சிந்தித்துப் பாருங்கள் எந்தன் தோழர்களே !
இயற்கையைவிட்டு விலகி வந்ததன் பலனிது தோழர்களே.."

    இறைவன் அந்தந்தப் பகுதிகளில் அந்தந்த உயிரினங்களுக்குத் ( நன்றாகக் கவனிக்கவும்...மனிதர்களுக்கு மட்டுமில்லை....உயிரினங்கள் அனைத்திற்கும் ) தேவையானவற்றை உணவே மருந்தாகவும்... மருந்தே உணவாகவும் படைத்து அளித்துள்ளான். ஆனால் நாம் அதைவிடுத்து... அன்றாட உணவு... உடை...வாழ்க்கை முறை - இப்படி அனைத்தையும் 
" நாகரீகம் " என்ற பெயரில் தாறுமாறாகப் பின்பற்ற முனைந்து... அவை ஒவ்வாமல்... அது நமக்குப் பொருந்தவில்லை என்று அறிந்தும் வரட்டுக் கௌரவத்திற்காகவும்... நாலு பேர் நம்மைக் கொண்டாட வேண்டும் என்ற ஒரு போலி மகிழ்ச்சிக்காகவும் வாழப்போய் இன்று " உள்ளதும் போச்சுடா.. நொள்ளக் கண்ணான்"னு இன்று நமது அருமையான உடல் மற்றும் உள்ள நலன்களை இழந்து தவிக்கிறோம். 

    நோய் எதிர்ப்பு சக்தியே மாபெரும் மருந்து. அதை வளர்க்க... நிலைபெறச் செய்ய நமது அஞ்சரைப்பட்டியே போதுமானது. இஞ்சியும்.. சுக்கும்..எலுமிச்சையும்.. மஞ்சளுமே ஆகப்பெரிய கிருமி நாசினிகள் என்று நமது வணக்கத்திற்குரிய சித்தர்கள் என்றோ எழுதி வைத்துவிட்டுப் போனது... இன்றும் தம்மை நிரூபிக்கின்றன உலகம் முழுவதும் ! இதைவிடப் பெரிய விஷயம் இன்றைய கொரோனா காலகட்டத்தில் என்ன உள்ளது நண்பர்களே... இளைஞர்களே... இளம் அன்னையர்களே ?
        தயவுசெய்து இளம் அன்னையர்கள் நமது பிள்ளைகளுக்கு நமது நாட்டின் பாரம்பரிய உணவு.. உடை மற்றும் உயர்ந்த நடைமுறைகளைச் சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டுகிறேன்.
  சிந்தியுங்கள்... சிறப்புடன் வாழத் துவங்குங்கள்..!
அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள் கண்மணிகளா !
   வாழ்க தமிழகம் !
   வாழிய பாரத மணித்திருநாடு !



3 comments:

  1. யதார்த்தமான உண்மை ... நீங்கள் எங்களுக்கு தினமும் சொல்லும் மந்திரமும் அது தான்...

    ReplyDelete
  2. Very true. More than science this generation should learn our tradition which has solution for all problems. Thanks for making us to realize this as this is the right time..

    ReplyDelete
  3. Aunty, completely agree with your statements. Sorry managed to get to read only today!

    ReplyDelete