Wednesday, 13 May 2020

உழைப்பு... உழைப்பாளர்கள்

வல்லமை தாராயோ.. இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே !

  அன்பானவர்களுக்கு வணக்கங்கள் !
    இத ஆங்கில வருட முறைப்படி மே மாதம். மே மாதம் ஒன்றாம் தேதியை " உழைப்பாளர் தினம் " என்று உலகளவில் கொண்டாடுகிறோம் உடலுழைப்பு நல்கும் அனைவரையும் கௌரவிக்கும் முகமாக. நல்லது.
   ஆனால் இன்றைய யதார்த்தம்.. உடலுழைப்புத் தொழிலாளர்கள்... அதிலும் புலம்பெயர்ந்து வந்தவர்கள் கொரோனாவை ஒட்டிய தடைவிதிப்பால் வேலைகளை இழந்து.. தங்கள் சொந்த ஊர்களுக்கு எப்படி எப்படியோ திரும்பிக்கொண்டு இருக்கிறார்கள் மிகவும் உடல் மற்றும் மனக் கஷ்டங்களுடன்..
இது மிகவும் வேதனையைத் தருகிறது.
    சில மாதங்கள் முன்பு வரை வட இந்தியத் தொழிலாளர்கள் தமிழகத் தொழிலாளர்களின் வேலை வாய்ப்பைப் பறித்துக்கொண்டு விட்டனர் என்று கூக்குரல் போட்டுக்கொண்டு இருந்தனர் சில அரசியல் கட்சிகளும்.. "தன்னார்வலர்கள்" என்று சொல்லிக் கொண்டு இருந்த சிலரும்..
     இந்த நேரத்தில் அவர்களிடம் ஒரு கேள்வி கேட்க எண்ணுகிறேன்.
    கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக மதுக்கடைகளைத் திறந்து உடல் உழைப்பாளர்களான வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்போர் மற்றும் கீழ் நடுத்தர.. மேல் நடுத்தர மக்களைக் குடிக்கு அடிமைகளாக்கி விட்டு..
அரசியல் சுய லாபத்திற்காக.. வாக்குகளை அள்ள வேண்டும் என்பதற்காக பலப்பல இலவசங்களுக்கும் அடிமையாக்கி விட்டு..(அந்த இலவசங்கள் சில நாட்களிலையே காயாலாங்கடைகளுக்கு வந்து விடுகின்றன என்பது இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் )
" வேலை இல்லாத் திண்டாட்டம்.. தமிழகத் தொழிலாளர்களுக்கு வேலை இல்லை " என்று கூக்குரல் போடுபவர்கள் ஒன்றை வசதியாக மறந்து விடுகிறார்கள் அல்லது மறந்தது போல் நடிக்கிறார்கள்.
    நூறு நாள் வேலைத்திட்டம்.. மகளிர் சுய உதவிக் குழு போன்றவை அருமையான திட்டங்கள் ! 
   இதில் வளமைபோல் நூறு நாள் வேலைத்திட்டம் கட்சிக்காரர்களின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது.
அதிலும் கமிஷன்.. உள் கமிஷன்... உள் உள் கமிஷன் என்று பல்வேறு கட்டங்கள் .
யார் யார் அந்த மேஸ்திரியைத் தினமும் " கவனிக்கிறார்களோ "அவர்கள் காலை 11 மணிக்கு மேல் வந்து விட்டு மதியம் 3 மணிக்குக் காசை வாங்கிக்கொண்டு (மேஸ்திரிக்கு வெட்ட வேண்டியதை வெட்டி விட்டுத்தான்) நேராக டாஸ்மாக் கடைக்குப் போய்விட்டு.. ஒன்று சாலையில் விழுந்து கிடக்கிறார்கள்.. அல்லது வீட்டுக்குப் போய் ரகளை பண்ணுகிறார்கள். 
  இவர்கள் வீட்டுப் பெண்கள் பிள்ளைகளின் படிப்பு மற்றும் இதர செலவுகள்.. பண்டிகைகள் போன்றவற்றிற்கு மகளிர் சுய உதவிக் குழு வழங்கும் கடனைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்... " அந்தத் திட்டம் மூலம் நாம் ஏதாவது சிறு தொழில் செய்து முன்னேறலாம் " என்பதை அடியோடு மறந்து விட்டு...
     இந்த நிலைக்கு யார் காரணம் ?
     இலவசங்களுக்கு அடிமையான மக்களா ?
    இலவசங்களைத் தாங்கள் கொள்ளையடித்த பணத்திலிருந்து கொஞ்சம் தூக்கி எறிந்தால் போதும்..இந்த மக்களை வெகு எளிதாக ஏமாற்றி ஆட்சியைப் பிடித்து விடலாம் என்ற நினைப்பில் திளைத்துப் போயிருக்கும் தமிழக திராவிடக் கட்சிகளா ?
      இதைப் படிப்பவர்கள் இந்த blogன் Post comment பகுதியில் தங்களின் மேலான கருத்துக்களைப் பதிவிடும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
     வாருங்கள்... அருமை நண்பர்களே ! நமது தமிழகத்தை நல்ல தமிழகமாக மாற்ற நம்மாலான முயற்சிகளை மேற்கொள்வோம்.
     அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள் நண்பர்களே !
       

1 comment:

  1. நம் தமிழ்நாட்டில் உள்ள. மக்கள் நல்ல‌ உழைப்பாளிகள்தான். இலவசங்களை கொடுத்து சோம்பேறியாக‌ ஆக்கிவிட்டார்கள்.

    ReplyDelete