நாம் இன்னா செய்தது எல்லாம் வல்ல ஆண்டவனின் பிற படைப்பினங்களான மரம் செடி கொடிகள்.. தாவரங்கள்.. விலங்குகள்.. பறவைகள்.. இவைகளின் வசிப்பிடங்களான மலைகள்.. காடுகள்.. ஆறுகள்.. குளங்கள்.. இப்படி..
Dodo Birds என்று கூகுளில் தேடிப்பாருங்கள் நண்பர்களே. மொரீசியஸ் தீவுகளில் வசித்த அவற்றைப் போர்ச்சுகீஸியர்களும்..பின்னர் டச்சுக்காரர்களும் எப்படி அவற்றை தங்கள் சுயநலத்திற்காகப் பயன்படுத்தினார்கள்...வெளியுலகத்திற்கு அறிமுகமான 150 ஆண்டுகளுக்குள் ஒட்டுமொத்தமாக அவை எப்படி அழிந்து போயின என்று தெரியவரும்.
இப்போது நாம் பாதிக்கப்படும் போது கதறுகிறோம்.. அலறுகிறோம்.. பயப்படுகிறோம்..அதுவும் நமது மனிதன் ஒருவனே உலகையாளும் பேராசையால் உருவாக்கி உலாவிட்ட ஒரு கிருமியால்..
இது எந்த வகையில் நியாயம் நண்பர்களே ???
தப்புகள் முழுவதும் நம் மனித குலத்தால் செய்யப்பட்டவை நண்பரே. மொழி பேச முடியா தாவர.. விலங்கு மற்றும் பறவை இனங்களை மொத்த மொத்தமாக அழித்தோம்.
சில மாதங்களுக்கு முன் அமேசான் காட்டுத்தீ எத்தனை உயிர்களைக் கதறக்கதறத் தாக்கி அழித்திருக்கும் ? அந்த அப்பாவி உயிரினங்களின் இறுதி கட்டக் கூக்குரல் உங்கள் காதில் விழவில்லை ?
அந்தப் " பாவம் " இப்போது மொத்தமாக நம்மைக் குறிவைத்து வந்திருக்கிறது.
நமக்கு ஆபத்து என்றதும் "குய்யோ முறையோ' என்று பதறுகிறோம்.. கதறுகிறோம்..
இது நியாயமா நண்பர்களே ?
இதைப் படித்துவிட்டு தங்களின் மேலான கருத்துக்களை Post comment sectionல் எழுதும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
அனைத்தும் உண்மை. இன்றைய இளம் அன்னையர்கள் இதனை புரிந்து நடந்தால் பிள்ளைகள் அதை புரிந்துகொள்வார்கள்
ReplyDelete